Published Date: April 17, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை மத்திய தொகுதியில் பொதுமக்களை சந்தித்து தனது செயல்பாட்டு அறிக்கையை விநியோகித்த மாநில நிதி, மனிதவள மேலாண்மை துறை, புள்ளியியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். உடன் மாநகராட்சி மேயர் வ. இந்திராணி. தொகுதி சார்ந்த தனது செயல்பாடுகள் குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தயார் செய்து, அதைத் தனது தொகுதி மக்களுக்கு விநியோகிப்பது அமைச்சரின் வழக்கம். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் தனது செயல்பாடுகள் குறித்த அறிக்கையை அவர் தனது தொகுதி மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை விநியோகத்தார்.
Media: Dinamani